![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZ_sbnV2BG2K-rL4yW4eWMVMFsgpzm2eNJF5QfUH7Qx2CjUWYb4Ipnze4i6izb-3gN2CtjD4C1ZQ4naYesSFovCGN2v3IhZH-fn_BkA4uzaP3JMQi6nbwJZuS4mmLP30-HzwACxIk7vsA/s320/Thattunkal.com.jpg)
கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியவசியத் தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரைத் தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் ஆலயங்களில் அதிகளவான மக்கள் ஒன்றுகூட வேண்டாம் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வவுனியா, செட்டிகுளம் முதலியார் குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவ மத ஆராதனை ஒன்று நடைபெற்றிருந்தது.
இது தொடர்பாக, செட்டிகுளம் பொலிஸாருக்குக் கிடைக்கபெற்ற தகவலுக்கமைய அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் ஆராதனையை நடத்திய போதகர் உட்பட 15 இற்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்திருந்ததுடன் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)