LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, March 24, 2020

தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு- முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாகப் பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட வேண்டிய மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் வரும் 31ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள நிலையில் அத்தியவசியத் துறைகள் தவிர்த்து ஏனைய அலுவலங்கள் இயங்காது எனவும் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நோயை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 144 தடை உத்தரவு ஒரு வாரத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7