![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLUF7JJcCY_leVi1vbYJ1rzdIDJckFjrzWQsGA1FDEXFXbHcN1jlD5Wt7oFkF8d1_tO1fvjLpluu72lrrwJr6OIqC8T9Faj7Z_dYf9P0K0KDDNCcKbsK1kCcoat9v0cMH0Bt1BtJ8JiYo/s320/Thattunkal.com.jpg)
பேஸ்புக் ஊடாக ஹேக்கர்களின் செயற்பாடுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த அங்கீகரிக்கப்படாத தாக்குதலை அவர்-மைன்ட் என்ற பெயர் கொண்ட ஹேக்கர்கள் குழு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேஸ்புக், ருவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன குறித்த தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான கணக்குகளை மீட்டெடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)