![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS_VGh1v-YM_pu2aD6hxSSNMiuyggFZZXngM9dTqUcH4sDzef2bfhKRbIawckYVxbIHaPwtRgcEW68Bgmyd5rsIuqP8APJNykyt9nTH26IV8Eywze9FK4X76OQNSoArTewoMxfL-mWw18/s320/Thattunkal.com.jpg)
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று மாட்டுடன் மோதுண்டதனாலேயே இன்று(சனிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையான சுனில் சாந்த (42 வயது), தாயாரான அனோமா தமயந்தி (39 வயது), பிள்ளைகளான தீக்ஸன் (10 வயது), ஸவ்மியா (8 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)