![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPxIu8c0XhdetCZgOL00jz6qd9WY96uJ1hryZcSpEDrqO92zvIqaDLNuIEe1tdvO1-TYj4dT-dUcIfT4-wXeDNLssnaMQedQQePj-r_5T-jtzRo4gzgsVR2e-6QaF1eX7pi8-z7D2xvok/s320/Thattunkal.com.jpg)
போராட்டங்களை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தூண்டிவிடுவதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த எச்.ராஜா குடியுரிமை சட்டத்தினால் இந்தியாவில் வாழும் எவருக்குமே எவ்வித பாதிப்பும் இல்லை என பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் இதனை மீறியும் சிறுபான்மை இன மக்களைப் போராடுவதற்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி விடுகின்றன என அவர் குற்றம் சாட்டினார்.
சென்னை, வண்ணாரப் பேட்டையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், டெல்லியைப் போன்று அங்கு வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
எனவே, அதற்கு முன்பாக வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்களை தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)