![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4AINAuVsrgHW3RTbB-b3SVsE9yOxMGxh4NuKZWSVFk_6yEWOeugEQAyKheFLCL1Uvkd5R86o_o78A7AgJ68BIwnyIiHakS6woBupP6DboJwIyRmWMLtOt1CnqWeWMsldyjzulEGToAGc/s320/Thattunkal.com.jpg)
வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் 60வயதான கணவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் தற்போது ரொறன்ரோவில் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு லேசான இருமல் மற்றும் காய்ச்சல் மட்டுமே அவரது ஒரே அறிகுறிகள் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனினும், அவரை நகரத்தின் உள்ளூர் பொது சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை, ஈரானுக்கான பயணத்திலிருந்து திரும்பி வந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு, அந்த நபரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் அந்த பெண்ணின் கணவர் அவருடன் ஈரானில் இல்லை.
எனவே கனடாவில் வைரஸ் பரவும் முதல் சந்தர்ப்பமாகும். மற்ற எல்லா நிகழ்வுகளிலும் நோயாளிகளுக்கு சீனாவுக்கு சமீபத்திய பயண வரலாறு இருந்தது
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)