LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 7, 2020

சபரிமலை கோயில் விவகாரம் : தனி குழுவை அமைத்தது நீதிமன்றம்!

சபரிமலை கோயிலுக்கு சொந்தமான
ஆபரணங்கள் குறித்து கணக்கிட்டு அறிக்கை அளிப்பதற்காக  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனி குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிப்பது மற்றும் கோயிலுக்கு சொந்தமான ஆபரணங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையின்போது,  சபரிமலை கோயிலுக்கு சொந்தமாக பந்தள அரச குடும்ப பாதுகாப்பில் வெறும் 16 ஆபரணங்கள்தான் உள்ளதா? அரச குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்தாலும் அவை கடவுளுக்கு சொந்தமானவைதானே? சபரிமலை கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக சட்டம் இயற்றுவதில் என்ன சிக்கல்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் கோயில் ஆபரணங்கள் தொடர்பாக கணக்கிட்டு அறிக்கை அளிப்பதற்கு  ஓய்வுபெற்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் தலைமையில் தனி குழுவை அமைத்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த குழு  கோயில் நகைகளின் தரம்  மதிப்பு மற்றும் வகைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து  சீலிட்ட கவரில் வைத்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கை 4 வாரத்திற்கு  ஒத்திவைத்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7