LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 1, 2020

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள்!

2020ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில்
நாடளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேவாலயமான மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2020ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டு.-அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருப்பலியினை ஆலயத்தின் பங்குத்தந்தை வி.எஸ்.அன்னதாஸ் அடிகளார் உட்பட அருட்தந்தையர்களும் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

இந்த விசேட புது ஆண்டினை வரவேற்கும் திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உள்ளிட்ட பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆயரினால் புதிய ஆண்டினை வரவேற்கும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் நீடித்த சாந்தியும் சமாதானமும் மலரவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7