![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0bti6szKyKhZ8hgO_hHIq1iAw28pxFhZpwH9NPBMVGwQ8WHxvB4DULqHSm6rDjIUJ1RV8obg2G0bYx4zzdxZGvJhoo_7P0onzPewuzisFVMugnrVA08CHtxe22IZyjsgV1zGYj6PcLx4/s320/Thattunkal.com.jpg)
விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) மதியம் யாழ். நகர் பகுதிகளில் உள்ள கடற்தொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒரு கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 30 கிலோ தங்கூசி வலைகளும் மற்றொரு கடையில் இருந்து சுமார் 330 கிலோ தங்கூசி வலைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கடை உரிமையாளர்கள் இருவரையும் விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுடன், மீட்கப்பட்ட வலைகளையும் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், கைதான கடை உரிமையாளர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)