LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, January 6, 2020

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்கத் தடை விதிக்குமாறு தி.மு.க. வழக்கு!

உள்ளாட்சித் தேர்தலில் திருவண்ணாமலை,
சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கத் தடை விதிக்கமாறு கோரி தி.மு.க. வழக்குத் தொடுத்துள்ளது.

தி.மு.க. சட்டத்தரணி நீலகண்டன் உட்பட சட்டத்தரணிகள் சிலர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்று முறையிட்டதுடன் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

அப்போது, தலைமை நீதிபதி வீட்டில் இல்லாததால் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் முறையிடுமாறு அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு வீட்டிற்குச் சென்று அவரிடம் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

அவர் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அவசர வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி சத்திய நாராயணாவிடம் முறையிடுமாறு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து சட்டத்தரணிகள் நீதிபதி சத்திய நாராயணாவிடம் முறையிட்டனர்.

அவர் இன்று விடுமுறை நாள் என்பதால் தலைமை நீதிபதி ஒப்புதல் இல்லாமல் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் நாளை நீதிமன்றிற்க வந்து முறையிடுமாறு கூறினார்.

இதையடுத்து சட்டத்தரணிகள், நாளை உயர்நீதிமன்றில் அவசர வழக்காக விசாரிக்க முறையிடுகிறோம் எனக் கூறிச்சென்றுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7