![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQl6Xf9Je-k4HapDkdJfI8joiQj3SvYeWLODOf6NYBBKD7Q9X5uY1xgsUr2z3AyVeiMtzdN2VbIVAhMRqY6RQFri_PoOBdNGUE1SAXd_2lj-9Tr84hP79FA9vmgtGKwN6VHn54flT3oX8/s320/Thattunkal.com.jpg)
பா.ஜ.க ஆதரவாளர்கள் எந்தளவிற்கு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் வீரியம் குறையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க பேரணிகளை முன்னெடுப்பது அதன் பலவீனத்தைக் காட்டுகிறது.
இவ்வாறான ஆதரவுப் பேரணிகளினால் எதிர்ப்புப் பேரணியின் வீரியம் குறையாது. இந்தப் பேரணி குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் தொடர்ந்து நீடிக்கும். மக்கள் அறவழியில் போராடுவார்கள்” எனத் தெரிவித்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆதரவாகவும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)