LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, January 5, 2020

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதி கைது!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் லஷ்கர் இ-தொய்பா
அமைப்பின் முக்கிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (சனிக்கிழமை) காலை அங்கு அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையின்போது குறித்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியான நிசார் அகமது தர் என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.

அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவரிடம் உயர் பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7