LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 1, 2020

சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது- இஸ்ரோ தலைவர்

சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
வழங்கியுள்ளதாக  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவன் மேலும் கூறியுள்ளதாவது, “தூத்துக்குடியில் ரொக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகின்றது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி ஆரம்பாகி விட்டது.

மேலும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்காக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக 6 ஆய்வு மையம் உருவாக்கப்படும்.

இதேவேளை சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும்.

சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் ‘ஆர்பிட்டர்’ செயல்பட்டு வருகிறது. அது இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும்” என குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7