LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 12, 2019

சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் – அமித்ஷா

சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்
இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இன்று(புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மசோதாவினை தாக்கல் செய்து உரையாற்றிய போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினரின் மக்கள் தொகை 20 சதவிகிதம் குறைந்துள்ளது.

அவர்கள் அனைவரும் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்திருக்க வேண்டும்.

இந்த மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என்று சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

அவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்று தான். இந்த மசோதா எப்படி இந்திய இஸ்லாமியர்களுக்கு தொடர்புடையது? இந்திய இஸ்லாமியர்கள் எப்போதுமே இந்திய குடிமக்கள் தான். அவர்கள் மீது எப்போதும் ஒடுக்கு முறை கையாளப்படாது.

இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நினைத்து கவலைப்பட தேவையில்லை.

இந்த மசோதா அவர்களை பயம் கொள்ளச் செய்யும் வகையில் இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் படி தான் செயல்படுகிறது.

இந்த அரசின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7