LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 11, 2019

யாழில் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு: சந்தேகநபர்கள் இருவரையும் சாட்சிகள் அடையாளம் காட்டினர்

சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு
உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டனர்.

அதனால் சந்தேகநபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது அடையாள அணிவகுப்பை நடத்த மன்று உத்தரவிட்டது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அடையாள அணிவகுப்புக்கு சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது நண்பரும் தனித்தனியே அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர்களை அடையாளம் காண அழைக்கப்பட்டனர்.

சிறுமியும் அவரது நண்பரும் எந்தத் தயக்கமுமின்றி சந்தேகநபர்கள் இருவரையும் அடையாளம் காட்டினர். இதனை அடுத்து சந்தேகநபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து நீதிமன்று உத்தரவிட்டது.

கடந்த மாதம் 15ஆம் திகதி கோப்பாய் இருபாலையில் ஒழுங்கை ஒன்றில் நின்று 14 வயதுச் சிறுமியும் அவரது நண்பரும் கதைத்துக் கொண்டிருந்த போது, அந்த வழியால் வந்த இருவர், அவர்களை மிரட்டியுள்ளனர்.

மதுபோதையில் இருந்த அந்த நபர்கள் இருவரும் சிறுமியின் நண்பரைத் தாக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் சிறுமியை அச்சுறுத்தி தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதுடன், மற்றையவர் சிறுமியின் நண்பரை மிரட்டி தடுத்து வைத்திருந்துள்ளார்.

சிறுமியை ஒதுக்குப் புறம் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற ஒருவர் அவரை சித்திரவதை செய்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

வீடு திரும்பிய சிறுமி, சம்பவம் தொடர்பாக தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் கோப்பாய் பொலிஸ் கடந்த 23ஆம் திகதி முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 26ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர்.

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்திருந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்த விண்ணப்பம் செய்தனர்.

அதனடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7