LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 20, 2019

ஒற்றையாட்சியில் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளே: முற்றுப்புள்ளி வைக்க முடியாது – கஜேந்திரன்

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் தமிழர்கள் இரண்டாம் தரப்
பிரஜைகளாக நடத்தப்படுகின்றமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வில் இடமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரையில், தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றமையை ஏற்க முடியாது. தமிழர்கள் சமத்துவமாக வாழக்கூடிய அரசியல் தீர்வு வேண்டுமென கூறியிருந்தார்.

அவர் கூறியுள்ள அனைத்து விடயங்களும் 13ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தன.

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றமைக்கு முற்றுப்புள்ளி வைக்க எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு தீர்வினாலும் முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7