LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 28, 2019

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியபாடசாலை மாணவன் விஜிதன் குருஷாந் மாவட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்று சாதனை

                                                                  (ஜெ.ஜெய்ஷிகன்)
2019ஆம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியபாடசாலை மாணவன் விஜிதன் குருஷாந் மாவட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். 
இவர் திரு.திருமதி.விஜிதன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட்ட புதல்வனான இவரின் தந்தை கோறளைப்பற்று வடக்கு வாகரைக் கோட்டத்திலுள்ள அதிகஸ்டப் பிரதேச பாடசாலையான மட்.ககு.கிரிமிச்சேனை அ.த.க.பாடசாலையின் அதிபராக பணிபுரிந்து வருகின்றார். தாயார் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுருக்கெழுத்தாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.

குறித்த விடயம் தொடர்பில் கல்லூரியின் முதல்வர் ஜெயஜீவன் அவர்கள்
  தொடர்பு கொண்டு கேட்ட போது விஜிதன் குருஷாந் கல்லூரியின் அனைத்து செயற்பாடுகளிலும் திறமைகாட்டி முன்மாதிரியாக செயற்பட்டு வருபவர். இவர் ஆங்கில தினப் போட்டிகள், விளையாட்டு, இசைக்கருவிகளை வாசித்தல், நல்ல குரல் வளம் மிக்கவராக திறன்களை வெளிப்படுத்தி வருபவர். 2010இல் தோற்றி புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளையும் மாவட்ட மட்டத்தில் 2ம் நிலையையும் பெற்று சாதனை படைத்தவர். 2016இல் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி 9A சித்திகளைப்பெற்றுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தான் சார்ந்த மண் மற்றும் கல்லூரியின் நற்பெயரையும் போற்றி, ஆசிரியர்களின் நல் அபிமானத்தையும் பெற்ற மாணவராக மிளிர்ந்து வருகின்றார்.  இவரது திறமைகளை வெகுவாகப் பாராட்டுவதோடு, சிறந்த எதிர்காலம் அமையவும் பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Thattungal.com இணையத் தளம் குறித்த மாணவரிடம் நேரடியாக கலந்துரையாடியது. விபரம்

பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டதருணத்தை எப்படி உணருகின்றீர்கள்?
விஜிதன் குருஷாந் குறிப்பிடுகையில் எனது குடும்பத்தாருக்கும் ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எல்லாம் வல்ல இறைவனுக்கும், என் தோளோடு தோள் நின்ற பெற்றோருக்கும், என்னைக் கற்பித்த ஆ;சிரியர்களுக்கும், எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், என் நலன்விரும்பிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

கற்றக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையில் வெற்றிபெற என்ன ஆலோசனை சொல்ல விரும்புகின்றீர்கள்?
முதலில் மாணவர்கள் தமக்கு விருப்பமான துறையை யார் தூண்டுதலும் இன்றி தெரிவுசெய்ய வேண்டும். தெரிவு செய்த துறையில் முழு விருப்பத்துடன் கற்க வேண்டும். குழப்பமான பிரிவுகள், சந்தேகங்களை அன்றே விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். வகுப்பு ஆசிரியர்கள் கற்பிப்பது விளங்காதவிடத்து வேறு ஆசிரியரிடம் வகுப்புச் செல்ல வேண்டுமே தவிர ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புக்களுக்குச் செல்வது வீண். சிறிய சந்தேகங்களைத் தீர்க்க இணையம் ஒரு சிறந்த ஆசான். 


விஜிதன் குருஷாந் 





                                                               குடும்பத்தினருடன்




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7