LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 9, 2019

ஈராக்கில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈராக் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

ஈராக்கில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்பு, ஊழலை ஒழித்தல், பொதுமக்கள் பாதுகாப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முக்கிய நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வன்முறை வெடித்ததை அடுத்து பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். அரசின் இந்த செயலுக்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்தது.

போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு பிரதமர் அடெல் அப்துல் மஹதி பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

இதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றபோது, மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 பொலிஸார் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதலில் செய்தி வெளியானது.

இந்நிலையில், தற்சமயம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7