செய்து படுகொலை செய்த குற்றவாளிகளின் கருணை மனுக்களை டெல்லி மாநில அரசு நிராகரித்துள்ளது.
குறித்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களது தண்டனையை குறைக்க வேண்டுமென கருணை மனுக்களை அவர்கள் தாக்கல் செய்தனர்.
குறித்த மனுக்களையே டெல்லி மாநில அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிராகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் 6 இளைஞர்களினால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 இளைஞர்களையும் டெல்லி பொலிஸார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸாரின் விசாரணைக்கு பின்னர் 6 பேரில் 5 பேர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவர் சிறார் என்பதால் சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு தண்டனையில் இருந்து தப்பினான்.
ஏனைய 5 இளைஞர்களில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டான். இதனால் மற்றைய 4 இளைஞர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
அந்தவகையில் பவன்குப்தா, முகேஷ்சிங், தனேஷ் சர்மா, அக்ஷய்தாகூர் ஆகிய 4 இளைஞர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் அவர்கள் 4 பேரும் தங்களது தண்டனையை குறைக்க வேண்டும் என்று கருணை மனுக்களை தாக்கல் செய்தனர்
அந்த கருணை மனுக்கள் மீதான ஆய்வை டெல்லி ஆளுநர் ஆய்வு செய்து வந்தார். நேற்று 4 குற்றவாளிகளின் கருணை மனுக்களை அவர் தள்ளுபடி செய்தார். அத்துடன் நீதிமன்ற உத்தரவுபடி 4 இளைஞர்களையும் தூக்கிலிடவும் அவர் பரிந்துரைத்தார்.
இதையடுத்து 4 குற்றவாளிகளின் கருணை மனு மத்திய உள்துறையின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.