LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 4, 2019

கிணற்றில் விழுந்து 5 வயதுச் சிறுவன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

யாழில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த
சிறுவன் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அராலி கிழக்கு வட்டுக்கோட்டைப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த சம்பவத்தில் குகதீசன் நருஜன் (வயது-5) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

தாயும் தந்தையும் வெளியில் சென்றநேரம் குறித்த சிறுவன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த தாயும் தந்தையும் மகனைக் காணாது தேடியபோது குறித்த சிறுவன் கிணற்றில் மிதப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7