LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 12, 2019

50ஆவது ரொக்கெற்றை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

பி.எஸ்.எல்.வி. ரக ரொக்கெற்றின் 50ஆவது
ரொக்கெற்றான பி‌.எஸ்.எல்.வி. சி-48 (PSLV C-48) என்ற ரொக்கெற்றை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரிசற் 2பிஆர்-1 (RISAT-2BR1) என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.

628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1ஆவது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி 48 என்ற ராக்கெட் மூலம் இன்று (புதன்கிழமை) மாலை 3.25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் இந்தெ ரொக்கெற்றில் வைத்து அனுப்பப்பட்டுள்ளன.

விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களிலேயே பி.எஸ்.எல்.வி சி 48 ரொக்கெற்றிலிருந்து ரீசாட் 2பிஆர் 1 செயற்கைக்கோள் பிரிந்து, பூமியிலிருந்து 576 கிலோமீற்றர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த 130 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்த 75 ஆவது ரொக்கெற்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7