LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 20, 2019

மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருத்தபோதும் மைத்திரிபால சிறிசேன நடுநிலை வகிப்பதாக அறிவித்திருந்தார்.

இதனால் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அக்கட்சியின் பதில் தலைவராக மூத்த உறுப்பினர் ரோஹண லக்ஷமன் பியதாச நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கும் பொதுத் தேர்தல், பிரதேச சபை தேர்தல் மற்றும் சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கூட்டணியின் கீழ் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7