LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 18, 2019

கல்குடா தொகுயில் இன நல்லிணக்கத்திற்காக ஐக்கிய சர்வமத குழு உதயம்

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குள் இயங்கி வந்த ஐக்கிய சர்வமத குழுக்; கூட்டம் கடந்த 14.11.2019 ஆம் திகதி மயிலங்கரச்சை தம்மாலங்கார விகாரையில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமானது. கட்டுகஸ்தோட்ட மஹிந்தாலங்கார தேரர் தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் புதிய குழு அங்கத்தவர்களும் இணைக்கப்பட்டு கல்குடா தொகுயில் இன நல்லிணக்கத்திற்காக செயற்படுவதென தீர்மானமும் எடுக்கப்பட்டது.

பின்வருவோர் நிருவாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக கட்டுகஸ்தோட்ட மஹிந்தாலங்கார தேரர் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக மௌலவி ஏ.எல்.முஸ்தபா அவர்களும் செயலாளராக வணபிதா க.சுனில் அவர்களும் உப செயலாளராக வணபிதா எஸ். ஏசாயா அவர்களும் பொருளாளராக க.மகேந்திரன் குருக்கள் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

நிருவாக உறுப்பினர்களாக வணபிதா ந.சிறிகாந், க.அதுல தம்மாலங்கார தேரர், மௌலவி எம்.எம்.முஹமட் தாஹிர் மற்றும் மௌலவி.ஏ.பி.எம்.முஸ்த்தபா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் எதிர்வரும் காலங்களில் கல்குடா தொகுயில் வாழும் மக்களின், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஒருமைப்பாடு, ஐக்கியம் சம்பந்தமாக பணியாற்றுவதற்கு திட சங்கற்பம் பூண்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். 





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7