LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 4, 2019

புதிய காற்றழுத்தத்தால் சென்னையில் மழைப்பெய்ய கூடும் : வானிலை ஆய்வு மையம்!

சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த
பகுதியால் 3 நாட்களுக்கு மழை  பெய்யகூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது, தற்போது பருவ மழை காரணமாக அவ்வப்போது மேகங்கள் திரண்டு மழையை தந்து கொண்டிருக்கிறது. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அனைத்தும் தமிழகத்தை விட்டு விலகி சென்றுவிட்டது.

தற்போது சென்னையில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு அந்தமான் அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.  இந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு எப்போது உருவானாலும் அது சென்னை, ஆந்திரா, ஒடிசா நோக்கிதான் நகர்ந்து வரும்.

இப்போது உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு ஆந்திரா, ஒடிசா நோக்கிதான் செல்லும் என தெரிகிறது. வடக்கு வடமேற்காக நகரும் போது சென்னை அருகே வந்து விடும். எனவே இன்னும் 4 நாட்களுக்கு பிறகு இதன் நகர்வை பொறுத்து மழையின் வேகம் தெரியவரும்.

தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு உருவானால்தான் சென்னைக்கு அதிக மழை கிடைக்கும். ஆனால் இப்போது உருவாகி வரும் காற்றழுத்தம் வடக்கு அந்தமான் அருகே உருவாகி வருகிறது.

எனவே ஆந்திராவுக்கு அதிக மழை கிடைக்கும். சென்னையை பொறுத்தவரை அதைவிட குறைவாக மழை கிடைக்கும். ஆனாலும் 3 நாட்களுக்கு மழை இருக்கும்.

நகரின் வெப்பநிலை அதிக பட்சம் 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7