LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 2, 2019

ராஜீவ் கொலை வழக்கு : முருகனை உறவினர்கள் சந்திக்க முடியுமா? – நீதிமன்றம்

தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முருகனை அவரது உறவினர்கள் சந்திப்பது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த ஆட்கொணர்வு மனுவினை முருகனின் உறவினரான தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தார்.

குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முருகன் வேலூர் சிறையில் இருந்து தனிமை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்  உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடிப்படையாகக்கொண்டு அவரது மனைவி நளினியும் முருகன் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7