LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 12, 2019

நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மன்மோகன் சிங் நியமனம்

நிதித்துறைக்கான நாடாளுமன்ற
நிலைக்குழு உறுப்பினராக காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நியமித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய் நகர மேம்பாடு நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனால், அவருக்குரிய இடத்தில் மாநிலங்களவை உறுப்பினர் மன்மோகன் சிங் நிதிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார் என மாநிலங்களவை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்பதற்காகவே, திக்விஜய் சிங் அந்தக் குழுவில் இருந்து விலகினார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை நாட்டின் நிதியமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். 2014 செப்ரெம்பர் முதல் 2019 மே மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிந்தது. அதன்பின்னர் ஓகஸ்ற்ட் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர் நிதித்துறைக்கான நிலைக்குழுவில் மன்மோகன் சிங் இருந்தபோது, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.ரி உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தீவிரமாகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7