LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 12, 2019

அயோத்தி விவகாரம்: 5 ஏக்கர் நிலம் வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அறிவிப்பு

அயோத்தி வழக்கில்
முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 5 ஏக்கர் நிலமும் தேவையில்லை என ஜாமியாத் உலிமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா பத்ஷா கான் தெரிவித்துள்ளார்.

அதையும் இராமர் கோயிலுக்கே வழங்கத் தயாராக இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மசூதி-இராம ஜென்ம பூமி வழக்கில் இந்த அமைப்பும் முஸ்லிம்கள் தரப்பில் இருந்தது. இந்நிலையில் அமைப்பின் தலைவர் மௌலானா பத்ஷா கான் கூறுகையில், “பாபர் மசூதி நிலத்துக்காகவே சட்ட ரீதியாக வழக்காடினோம். வேறொரு நிலத்துக்காக அல்ல. வேறு எங்கும் மசூதிக்காக எந்த ஒரு நிலமும் எங்களுக்குத் தேவையில்லை. இந்த 5 ஏக்கர் நிலத்தையும் கூட இராமர் கோயிலுக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இதேவேளை, “நாங்கள் நிலம் வாங்கி அதில் மசூதிக் கட்டிக் கொள்ள முடியும். நாங்கள் எந்த ஒரு அரசையும் இதற்காக நம்பவில்லை. நீதிமன்றமோ, அரசோ எங்கள் உணர்வுகளை மட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட அந்தப் பகுதிக்குள்ளேயே தர வேண்டும்” என்று மவுலானா ஜலால் அஷ்ரப் என்ற உள்ளூர் மதகுரு தெரிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கூறுகையில், “அவர்கள் எங்களுக்கு நிலம் அளிக்க வேண்டும் என்று விரும்பினால், எங்கள் வசதிக்கேற்பவே அளிக்க வேண்டும். அதாவது அந்த 67 ஏக்கர் நிலப்பகுதியில்தான் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7