LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 4, 2019

சஜித் மாத்திரமே அடிமட்ட மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ள கூடியவர்- இராதாகிருஸ்ணன்

சஜித் பிரேமதச மாத்திரமே
அடிமட்ட மக்களின் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு சேவையாற்றக்கூடியவரென அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலங்களில் மலையக மக்கள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வந்தாலும் அவை பேச்சளவில் மாத்திரமே இருந்தன.

அதாவது, வரவு செலவு திட்டத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்பதாக கூறினாலும் அதற்காக ஒரு சதத்தையேனும் ஒதுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் எந்த காரணம் கொண்டும் தேயிலை செடிகளை பிடுங்குவதற்கு அனுமதி வழங்க முடியாது என கூறிய ஒரு கால கட்டமும் உண்டு.

ஆனால், சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்கள் தொடர்பான விடயங்கள் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நிறைவேற்றக் கூடிய விடயங்களாகும். பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்படவில்லை.

எனவே இவ்வாறான ஒரு தலைவரையே மலையக மக்கள் வரவேற்கின்றார்கள். மேலும் தலைவன் என்பவன் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். இந்த தகுதி எங்களுடைய வேட்பாளரிடம் இருக்கின்றது.

அதேபோல எங்களுடைய நீண்டகால கனவான மலையக தேசிய பாடசாலை, சஜித் பிரேமதாச ஜனாதியதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அதற்கான அடிக்கல் நாட்டப்படும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் 10 தேசிய பாடசாலைகள் என குறிப்பிப்பட்டுள்ளது. ஆனால் நான் சஜித் பிரேமதாசவுடன் கதைத்திருக்கின்றேன். 10 தேசிய பாடசாலைகள் போதாது அது 25 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று அதனையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7