![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTtaILrB6leiVU9sCYUW8jHX4hZVfFEyOSjWEPH5vFdy9W9hIFcosMzTqbcgmbpJ5qaHu0m2s264wyKQF8D1rHgNp8FnHZaIIq4NnqOEFgxJAXQc7s0nWOSPsun4X3h703snxhq9FvZ-I/s320/%25E0%25AE%2585%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AF%258D-720x450.jpg)
வழங்கியுள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனவும் இதற்காக தொடர்ந்து போராடுவோம் எனவும் ஏஐ.எம்ஐ.எம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
அயோத்தி வழக்கில் இன்று (சனிக்கிழமை) வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாசுதீன் ஒவைசி, ‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் உச்சமானதாக இருக்கலாம். ஆனால் அது தவறிழைக்காது என கூற முடியாது.
அரசியல் சட்டத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தானமாகத் தேவையில்லை. 5 ஏக்கர் நிலத்தை நிராகரிக்கிறோம். அதனை ஏற்கும் நிலையில் இருக்க விரும்பவில்லை.
அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் தனது போலி நிறத்தை விடுத்து உண்மையான நிறத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாபர் மசூதிக்குள் 1949-ம் ஆண்டு சிலை வைக்கப்படவில்லை.
பாபர் மசூதியின் கதவை ராஜீவ் காந்தி திறந்து விடாவிட்டால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும். நரசிம்மராவ் தனது பணியைச் சரிவர செய்திருந்தால் பாபர் மசூதி இருந்திருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)