LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 8, 2019

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – 85 பேர் உயிரிழப்பு

நாட்டில் தற்பொழுது நிலவும் பருவ
பெயர்ச்சி காலநிலையை காரணமாக டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இந்த வருடத்தில் கடந்த 11 மாத காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் 64,290 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொழும்பு, கம்பஹா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக நுளம்புகள் உள்ள இடங்களை துப்பரவு செய்வது தொடர்பாக பொதுமக்கள் மிகந்த அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7