![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKmhwyIonSKS6ViszU1cSGYDWPxw0e5K78aCVNwlLRuyvwStL-88LWru5190O2QtzeIdtvGJhE_DlF03Ay7Jak8nl_WhrvXzMuSLRwMgBrhcBT1k6zsCa6YjYf4G9iiI6LdumdLJEwhSo/s320/Kilinochchi.jpg)
பகுதியில் ஆயுதங்கள் உட்பட்ட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்தே குறித்த ஆயுதங்கள் இன்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, ரி-56 ரக துப்பாக்கி-1, பிஸ்டல்கள் -3, கைக்குண்டுகள் -5, ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 150, பிஸ்டல் ரவைகள் 45, மடிக்கணினி ஒன்று, தொலைபேசிகள் -4, எம்.ரி.எம்.ரி ரக துப்பாக்கி ரவைகள் 7, டேட்டனேற்றர்கள் 45, ஜி.பி.எஸ்-1, டிஜிட்டல் கமெரா, சிறிய ரிமோட் வகைகள், குண்டுகளை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் வயர்கள், வெடிப்புக் கருவிகள் உட்பட இன்னும் சில உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)