LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, September 6, 2019

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு: சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக
சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால் அதற்கான தக்க இழப்பீடுகளை வழங்கவுள்ளதாக அவர் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “அத்துடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டன.

716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதற்கான சான்றுகள் இல்லை. இக்காணிகளுக்கான உரித்தை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் இழப்பீடுகளை வழங்க நான் தயார்.

மேலும், பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984 ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன.

இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டதும் இவர்களுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7