LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, September 10, 2019

ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரம் வழங்கப்படும் – யாழில் சஜித் உறுதி

ஐக்கிய இலங்கைக்குள் பூரண
அதிகாரத்தை வழங்குவதே தனது இலக்காகும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

யாழுக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஐக்கிய இலங்கைக்குள் பூரண அதிகாரத்தை வழங்குவோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அந்த நிலைப்பாட்டின்தான் நாம் இருக்கிறோம்.

தற்போது கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கவே நாம் முயற்சித்து வருகிறோம். மக்கள் தான் இறுதித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். நான் கட்சியின் பிரதித்தலைவராக இருக்கிறேன்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்குவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவ்வாறு களமிறங்கினால், வெற்றி உறுதி என்பதையும் நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளேன். உண்மையில், எமக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. நாம் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.” என கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7