LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, September 28, 2019

சகோதரியை துஷ்பிரயோகம் செய்த சகோதரன் – மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்
பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 20 வயது சகோதரன் கைதாகியுள்ளார்.

இந்நிலையில் 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (சனிக்கிழமை) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தையாரின் முதல் மனைவியின் மகனான சகோதரன், தந்தையாரின் இரண்டாவது மனைவியின் மகளான சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த இளைஞரை நேற்று கைதாகியிருந்தார்.

குறித்த இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்து அவருடன் வாழ்ந்து வருவதாகவும் இந்த நிலையில் குறித்த சிறுமி தந்தையார் மற்றும் சிறிய தாயுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் கல்விகற்று வரும் குறித்த சிறுமியான சகோதரியை கடந்த ஒரு மாதகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7