தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி அவர் இந்த சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
14 நாட்கள் மேற்கொள்ளவுள்ள இந்த சுற்றுப்பயணத்தில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அங்கு வசிக்கும் புலம்பெயர் தமிழக முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் அவர் கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சுகாதாராம், தொழில்துறை, தகவல் தொழிநுட்பம், பால்வள மேம்பாடு ஆகிய துறைகள் குறித்து அறிந்துகொள்ளவதற்காகவும் அவர் குறித்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.





