LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, August 2, 2019

ஆணழகன் போட்டியில் வென்ற இளைஞனுக்கு அன்பளிப்புத் தொகை வழங்கிவைப்பு

ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்ற இளைஞனுக்கு அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் லபுக்கலை கொண்டகலை பிரிவில் வசிக்கும் இளைஞரான மாதவன் ராஜ்குமார் என்பவருக்கே,  ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பணத்தை இ.தொ.கா தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று (வெள்ளிக்கிழமை) கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

இலங்கை – இந்திய சமுதாய பேரவையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் இணைந்து இந்த அன்பளிப்பினை வழங்கியுள்ளன.

அத்துடன் எதிர்வரும் காலத்தில் டுபாய் நாட்டில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியில் பங்குபற்றுவதற்காக செல்லவுள்ள இவருக்கு விமான பயணச்சீட்டும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத், உப தலைவர், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7