![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyWsS2edNeUcsiGa1V5dAyb0BH8jvId4xXXSwcYANBF2hnKfZ2Z3_Mr4Kwibm1OXjdzE38eiycPhWvu-wcpITAVomSeEhog3tPCXBmbTNW1ITII3vR1LtSKDVpEvz8s86lOQdiChjsV6Y/s640/Vavuniya-Accident.jpg)
மோட்டர் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன மோதியதாலேயே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து ஏ-9 வீதியூடாக யாழ். நோக்கிப் பயணித்த மோட்டர் சைக்கிள் ஓமந்தை, கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் வீதியைக் கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 14 வயதான நொச்சிமோட்டையைச் சேர்ந்த உருத்திரகுமார் திவாகர் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியான சுப்பிரமணியம் வெங்கடசரணியன் (வயது 35) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து ஓமந்தைப் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)