![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgF110WIXD67MsoiSgYiNfrNA9ojJX6umRRfSZ-L8OvE3AMPk8NJpjE_4KS0_R6Y_DiRUibJsnF52egFjCwSVPQF9I_cNmr9Msnuivft198gAB-97o6DRPddFqVG2Ogc1GOk-vFvVyLQrA/s320/Drivers.jpg)
சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 129 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணிநேர காலத்தில் குறித்த 129 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8 ஆயிரத்து 993 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)