
காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என தாங்கள் பலமுறை தெரிவித்த பின்னரும், காங்கிரஸ்தான் நீட் தேர்வை கொண்டு வந்தது என அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது, அவர் எதையும் ஏற்றுக் கொள்ளவிலை என்பதை காட்டுகிறது என கூறினார்.
மேலும் ராகுல் காந்தியும், தி.மு.க .தலைவர் ஸ்டாலினும் ஒரே மேடையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்பதையும் அழகிரி இதன்போது சுட்டிக்காட்டினார்.
