![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzJSBcKnTGZ-m6QII9kTuqklqlx1tl6lW1SVOooX2RQwPfc48MRp5085PJ7ldj8W_1JfFuci1qmwhLi0P-wNt5zU9mEBBxzP6P0dR5F-SdN0qAJl0fJ7OC3Vv2btCzyzPr7xHN9DH6UhA/s640/5ae070680f25441c083ff54f-720x438.jpg)
துருக்கியின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து அதி நவீன எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்வனவு செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் எப்-35 ரக போர் விமான தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை துருக்கி ரத்து செய்ய ஜூலை 31 ஆம் திகதி வரை ட்ரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.
அவ்வாறு இல்லாவிட்டால், எப்-35 ரக போர் விமானம் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிக்காக அமெரிக்காவில் உள்ள துருக்கி நாட்டு விமானிகளை அங்கு தங்கவிட மாட்டோம் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளின் மீது விதிக்கப்படும் பொருளாதார தடை, துருக்கி மீதும் திணிக்கப்படும் எனவும் அமெரிக்கா அறிவித்திருந்தது.
ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களில் முதல் கவனை நேற்று முன்தினம் துருக்கி பெற்றுக் கொண்டது.
இந்தநிலையில், துருக்கி மீது அடுத்த வாரத்துக்குள் பொருளாதார தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)