
ஆனால், பொய் சாட்சிகளை வழங்கி, சட்டத்துக்கு புறம்பாக, வஞ்சகமான முறையில் மரண தண்டனை வழங்குவதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கெஸ்பேவ – கஹாபொல ஸ்ரீ சத்தர்மராம விகாரையில் புதிய அறநெறி பாடசாலை கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்படுபவர்களுக்கும் நாம் எதிர்க்கொண்டுள்ள நவீன ரக பயங்கரவாதத்திற்கும் எவ்வாறு பதலளிப்பது என்பதனை நாடென்ற ரீதியில் தீர்மானிப்பது அவசியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
