
இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிசேனாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அறிக்கையினை கையளித்தார்.
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ், இலங்கை கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2018 ஜனவரி 31 வரை இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க கடந்த வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி குறித்த அணிக்குழுவினை ஜனாதிபதி நியமித்திருந்தார்.
இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
