LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, July 8, 2019

பல இடங்களில் மின் வெட்டு ஏற்படலாம் – மின்சார சபை

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளமையினால் பல இடங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியம் வரை குழாய் இடும் நடவடிக்கையின் போது மோதரை பிரதேசத்தில் அண்மையில் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் 3 ஆம் திகதி முதல் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதாக அறிவித்தது.

அதன்படி கடந்த மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சாரசபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தது.

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை 3 ஆம் திகதி முதல் நிறுத்துவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் எச்சரித்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மின் சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7