![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7mKbSKAgt4tmBIZJIHkq3SFalV_oLQ-BCo_KHVtg3gf49J83-CcNlpWixekJXSBL9Ig87dGAl-hHViGKOseV9WqfbQ6-vedtCdpbKZRIBGHcPrRoZTZXRoHVZ0yWWlcW9IEwC439wqyc/s640/eastern-Indonesia.jpg)
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் – வடக்கு மாலுக்கின் மிகப்பெரிய தீவான ஹல்மஹேராவிலுள்ள டெர்னேட் நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, அண்மைக்காலமாக இந்தோனேசியா, ஐப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)