LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, June 17, 2019

ஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்? – PTA ஐ பயன்படுத்தி உள்ளே போட வேண்டும்: கொதிக்கிறார் வாசு

யாழில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை நாட்டின் சட்டதிட்டத்திற்கு முரணான விடையம் அன்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற சோசலிச மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,”யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாகுழு என்பது ஆயுத குழுவாகும். அது அரசியல் கட்சி அல்ல.
ஆயுதக் குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தமையானது நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு முரணானதாகும்.
ஏனெனில் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததுபோலாகும். சாதாரணமாக செயற்பட்டுவந்த இவர்கள் இதன் பின்னர் தீவிரமாக செயற்படலாம்.
ஆளுநரின் நடவடிக்கையானது அவர்களை மேலும் பலமடைய செய்வதாகும். இதனை அவர் செய்யக்கூடாது. எனவே ஆவா குழுவை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன் மூலமே அங்கு அமைதியை ஏற்படுத்தமுடியும்.” என கூறினார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7