வித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற சமுர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்விற்காக சென்ற ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் வருகையை எதிர்த்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் 841ஆவது நாட்களாக வவுனியாவில் போராட்ட களத்தில் சுழற்சி முறையான போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வுகளை நிறைவு செய்துகொண்டு மாலை 4.40மணியளவில் வன்னி விமானப் படைத்தளத்திற்கு வந்திறங்கிய அமைச்சர், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக கண்டி வீதி வழியாக செல்லாமல் பிரதான மணிக்கூட்டு வீதி வழியாக, வைத்தியசாலைச் சுற்றுவட்டம் ஊடாக நகரசபை மைதானத்தினை சென்றடைந்தார்.
இதனிடையே, போராட்டத்தினை மேற்கொண்ட உறவுகள் தமது பிள்ளைகளின் விடுதலைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் தமக்கு வாய்க்கு அரசி போடவா வருகிறீர்கள் என கோசம் எழுப்பியவாறு போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இதையடுத்து, வீதியை வழிமறிக்கச் சென்ற உறவுகளின் போராட்டத்தினை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியிளித்துவிட்டு தற்போது ஆட்சிக்காலம் நிறைவுறும் தருணத்தில் எந்தத் தீர்வையும் வழங்காத நிலையில், அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டத்தினை மேற்கொண்டனர்.
எனினும் சமுர்த்தி நிகழ்வு திட்டமிடப்பட்டவாறு இடம்பெற்றுள்ளது.