LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, June 22, 2019

அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் – ஈரான் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. அண்மையில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தனர். இதற்கிடையே ஈரானின் தெற்கு பகுதியிலுள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சுமத்தியது.

இதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரிக்கும் விதமாக தனது டுவிட்டரில் ‘ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது’ என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், எங்கள் நாட்டின் மீது ஒரு குண்டு பாய்ந்தாலும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் இராணுவ தளபதியின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸல் ஷேகர்ச்சி எச்சரித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7