
ராஜபக்ஷ போட்டியிட்டால் அதற்கு தான் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணையத்திற்கு எதிராக குமார வெல்கம தாக்கல் செய்த திருத்த மனு தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர், பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இந்த விடயம் குறித்த தனது நிலைப்பாட்டை ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்தே தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கொலையுடன் தொடர்புபட்ட நபர் இருப்பாராக இருந்தால், குறித்த நபர் கொலை செய்தவர் என்று மக்களிடம் கருத்து நிலவுமானால் அவருக்கு ஒருபோதும் தான் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று கூறினார்.
அத்தோடு அனைத்து அரசாங்கமும் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக கொலைகளை செய்துள்ளதாகவும் குமார வெல்கம தெரிவித்தார்.
