தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில் நிலைய மேலாளர்கள் புரியும் மொழியில் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில் நிலைய ஊழியர்கள் தமிழில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், ரயில்வே பொதுமேலாளர் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தென்னக ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை பயன்படுத்தி தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் மொழியை பயன்படுத்த கூடாது எனவும் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.
ரயில்வேயின் இந்த அறிக்கைக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இதன் காரணமாக குறித்த சுற்றறிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.