
துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய வோட்டர்லூ பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
துப்பாக்கி சூடு மேற்கொண்ட நபர் தொடர்பில் காணொளி வெளியிட்ட பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம், ஜூன் 24ஆம் திகதி ஃபேர்வே வீதி மற்றும் வில்சன் அவென்யூவில் உள்ள கிட்செனர் பிளாசா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில், இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் அவர்கள், சிகிக்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், ஒரு பெண் மற்றும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
